போதையில் துணி திருடிய ஏட்டையா-டாக்டர்
சேலம்:
போதையில் துணி பண்டலை திருடிக் கொண்டு காரில் தப்பிய ஏட்டையா, டாக்டர் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அருகே உள்ள ஏ.எல்.சி. ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து துணி மூடைகளுடன் ஒரு வேன் நாமக்கல்சென்று கொண்டிருந்தது.வேனை ராசிபுரம் அருகே சாலையில் நிறுத்திவிட்டு அருகே உள்ள தோட்டத்தில் உணவருந்திக் கொண்டிருந்தனர்வேனில் சென்றவர்கள்.
அப்போது நாமக்கல் காவல் நிலைய ஏட்டு கோபால் (49), அவரது நண்பர்களான கால்நடை மருத்துவர்இளங்கோ, பைனான்சியர் நடராஜன், சேகர் ஆகியோர் காரில் முழு போதையில் அவ்வழியாக சென்றனர்.
போலீஸ் யூனிபார்மில் இருந்த ஏட்டையா தான் காரை ஓட்டினார். துணி மூட்டைகளுடன் நின்ற வேனைகண்டவுடன் காரை நிறுத்தினார் ஏட்டையா. இதையடுத்து வேனில் இருந்த ஒரு மூட்டையைத் தூக்கி காரில்போட்டுக் கொண்டு கிளம்பினார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வேன் டிரைவர் உடனே போலீசாருக்கு செல்போனில் தகவல் தந்தார். கமிஷனர்கோபாலகிருஷ்ணன் உத்தரவின்படி அந்த கார் சென்று கொண்டிருந்த பை-பாஸ் சாலையில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
சீலநாயக்கன்பட்டி அருகே சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் அந்த கார் சிக்கியது. துணி பண்டலை திருடியகாரை போலீஸ் ஏட்டு ஓட்டி வருவதைப் பார்த்து போலீசார் அதிர்ந்தனர்.
காரை போலீசார் சோதனையிட்டபோது துணி பண்டல் உள்ளே கிடந்தது. ஆனன், ஏட்டையாவும் அவரதுநண்பர்களும் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நால்வரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications