நெல்லையில் நாளை தேமுதிக முப்பெரும் விழா
திருநெல்வேலி:
விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முப்பெரும் விழா நாளை திருநெல்வேலியில் நடக்கிறது.இதையொட்டி மிக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதையொட்டி இந்தவிழாவுக்கு விஜய்காந்த் ஏற்பாடு செய்துள்ளார்.இந்த தினத்தை வறுமை ஒழிப்பு தின விழா, தீவிர உறுப்பினர் சேர்க்கை விழாவாகவும்தேமுதிக கடைபிடிக்கிறது.
இதையொட்டி நெல்லை நகர் முழுக்க தோரணங்களும் வரவேற்பு வளைவுகளும்கொடிகளுமாக காட்சியளிக்கின்றன. விஜய்காந்தின் போஸ்டர்களும், கட்-அவுட்களும்கண்ணைப் பறிக்கின்றன.
விழாவுக்கு வரும் விஜய்காந்தை வரவேற்க மிக பிரமாண்டமான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவுக்கு நெல்லை மாவட்ட தேமுதிக தலைவர் சீதாபதி ராமநாதன் தலைமைதாங்குகிறார். விஜய்காந்த் விழா பேருரை ஆற்றுகிறார்.
கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தன், அவைத் தலைவர் பண்ருட்டிராமச்சந்திரன், பொருளாளரான டைரக்டர் ஆர். சுந்தர்ராஜன், கட்சியில் புதிதாக சேர்ந்தமாஜி அதிமுக மந்திரி கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
விழாவையொட்டி மாலையில் கட்சியின் கலை இலக்கிய அணி சார்பில் கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
விழாவுக்கு வரும் விஜய்காந்தை வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில் நெல்லை, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர்,ராமநாதபுர், தேனி, திண்டுக்கல் மாவட்ட கட்சி நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றால்போதும் என விஜய்காந்த் அறிவித்துள்ளார்.
ஆனாலும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பஸ்கள், லாரிகள், வேன்கள்,கார்களில் தொண்டர்களும் நிர்வாகிகளும் நெல்லையில் குவியத் தொடங்கிவிட்டனர்.
விஜயகாந்த் திராவிடன் இல்லை முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு நெல்லைவிழாவில் பதிலளிப்பதாக விஜயகாந்த் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி உண்டா இல்லையா என்பது குறித்தும் இந்தமாநாட்டில் விஜய்காந்த் விளக்குவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications