பலூனில் பறந்து போட்டோ: கல்பாக்கத்தில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கல்பாக்கம்:

பலூனில் பறந்தபடி கல்பாக்கம் அணு மின் நிலைய பகுதியில் புகைப்படம் எடுத்த பிரான்ஸ் நாட்டுக்காரரால்பரபரப்பு ஏற்பட்டது.

கல்பாக்கம் அணு மின் நிலையப் பகுதியில் பாதுகாப்பு உச்சகட்டத்தில் உள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம்காரணமாக இந்த அளவுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வப்போது அங்கு ஊரடங்கு உத்தரவும்அமல்படுத்தப்படுகிறது.

இப்படி உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள கல்பாக்கம் அணு மின் நிலையப் பகுதியில் நேற்று ஒருவெளிநாட்டுக்காரர் பலூனில் பறந்தபடி வந்தார்.

பலூனில் இருந்தபடியே அவர் புகைப்படம் எடுத்தார். இதைப் பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரைஎச்சரித்து கீழே இறங்கச் செய்தனர். அவர் இறங்கி வந்தவுடன் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் ராணுவம், மத்திய உளவுத்துறை, போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரதுபெயர் நிக்கோலஸ், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது.

சர்வதேச புகைப்பட நிபுணரான அவர், மாமல்லபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த நினைவுத் சின்னங்களைபுகைப்படம் எடுத்த அவர் இதற்காக மத்திய அரசின தொல்பொருள் துறையிடம் முறையாக அனுமதியும்வாங்கியிருந்தார்.

இதுதொடர்பாக அவர் ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்டினார். ஆனால் கல்பாக்கம் அணு மின் நிலையத்தைஅவர் படம் எடுக்கவில்லை எனத் தெரிந்தது. இதையடுத்து கடுமையாக எச்சரித்த பின்னர் அந்த புகைப்படநிபுணரை அதிகாரிகள் விடுவித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக அணு மின் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+