For Daily Alerts
Just In
விளம்பரம் தேடும் திமுக அரசு-வைகே
கரூர்:
விளம்பரம் தேடுவதிலும், ஆடம்பர விழாவில் கலந்து கொள்வதிலும் கருணாநிதி அரசு வீண் செலவு செய்துவருகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.இதுகுறித்து கரூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
கரூர் நகர மக்கள் மற்றும் மாவட்ட மக்கள் பாதிப்படைகிற வகையில் வெங்கமேடு ரயில்வே மேம்பால பணிசெய்யப்படாமல் உள்ளது. மக்கள் படுகிற கஷ்டத்தை கண்டு கொள்ளாமலும், ரயில்வே மேம்பாலப்பணிகள்முடிக்கப்படாமலும் உள்ளது.
இதே போல் அமராவதி பாலமும் பழுது அடைந்து உள்ளது. இந்த பணிகளை செய்யாமல் விளம்பரம்தேடுவதிலும் ஆடம்பர விழாவில் கலந்து கொள்வதிலும் கருணாநிதி அரசு செலவு செய்கிறது. மக்கள் நலனைபாதுக்காமல் அலட்சிய போக்கோடு இருக்கும் அரசுக்கு எடுத்துகாட்டும் வகையில் மதிமுக, அதிமுக மாவட்டசெயலாளருடன் கலந்து பேசி விரைவில் அறப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.
Comments
Story first published: Monday, September 18, 2006, 5:30 [IST]