ஐஐஎம் மாணவர்களை அசத்திய வாத்யார் லாலு
அகமதாபாத்:
அகமதாபாத் இந்திய நிர்வாகவியல் மைய (ஐஐஎம்) மாணவர்களுக்கு 3 மணி நேரம் பாடம் நடத்தியும், அவர்கள்கேட்ட கேள்விகளுக்கு லாவகமாக பதில் அளித்தும் அசத்தினார் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.
நஷ்டத்தில் மூழ்க இருந்த ரயில்வே துறையை லாபகரமான துறையாக மாற்றியது எப்படி என்பது குறித்து ஐஐஎம்மாணவர்களுக்கு லாலு பிரசாத் பாடம் நடத்தினார்.ஐஐஎம் மாணவர்களே ஆச்சரியப்படும் வகையில் படு லாவகமாக பாடம் நடத்தி அசத்தி விட்டார் லாலு. தனதுதலைமையில் இந்திய ரயில்வே எப்படி லாபகரமாக செயல்படுகிறது, பயணிகள் கட்டணத்தை ஏற்றாமல் எப்படிலாபம் சம்பாதிக்க முடிந்தது, அதன் சூட்சுமம் என்ன என்பது குறித்து கிட்டத்தட்ட 3 மணி நேரம் மாணவர்களுக்குவிளக்கினார் லாலு.
உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களை இந்தியாவில் உருவாக்குவது, சுத்தமான ரயில்கள், நவீன ரயில்நிலையங்கள், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தருவது குறித்த தனது எதிர்கால லட்சியங்களையும்மாணவர்களிடம் விளக்கினார் லாலு.
மாணவர்களும் படு ஆர்வமாக பல்வேறு கேள்விகளை லாலுவிடம் கேட்டனர். அதற்கு தனக்கே உரிய ஸ்டைலில்அசத்தலான பதிலை அளித்து மாணவர்களை ஆச்சரியப்படுத்தினார் லாலு. காமெடியாக பேசப் போகிறார் எனநினைத்திருந்த மாணவர்களுக்கு, நிர்வாகத் திறமைகளை எப்படி வெளிப்படுத்துவது என்பது குறித்து படுசீரியஸாக லாலு பேச பேச பெரும் ஆச்சரியமாகப் போய் விட்டதாம்.
ஐஐஎம் மாணவர்களிடையே தன்னை பேச அழைத்தற்கு சந்தோஷம் தெரிவித்த லாலு, இதை கெளரவிக்கும்வகையில் அகமதாபாத் ஐஐஎம் வளாகத்தில் ரயில்வே குறித்த படிப்புக்கு ஒரு பிரிவை ஏற்படுத்துவதாகவும்அறிவித்தார். இதற்கு ரயில்வே அமைச்சகம் முழு நிதியுதவி செய்யும்.
மேலும் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் விவசாயிகளுக்கான மையங்களை ஏற்படுத்தத்திட்டமிட்டுள்ளதாகவும் பின்னர் செய்தியாளர்களிடம் லாலு தெரிவித்தார். மொத்தம் 7,500 மையங்கள்ஏற்படுத்தப்படவுள்ளன. விவசாயிகள், தங்களது உற்பத்திப் பொருட்களை இந்த மையம் மூலம் விற்கவும்,ரயில்களில் அனுப்பி வைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என லாலு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications