பாம்புடன் வந்தவர் அதே பாம்பு கடித்து சாவு!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

போலீஸ் விசாரணைக்காக பாம்புடன் காவல் நிலையம் வந்தவர், அந்த பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தார்.

தஞ்சை மானாம்புசாவடி என்ற ஊரைச் சேர்ந்தவர் சுந்தரி. தனது கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார்.இவருக்கும், சுந்தரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சுந்தரி தனது தாயாரின் வீட்டுக்கு வந்தார். ஆனால் எலியிடம் தப்பி புலியிடம் மாட்டிய கதையாகமாறியது சுந்தரியின் நிலை. தாயாரின் 2வது கணவரான ஞானசேகரன் என்பவர், சுந்தரியிடம் பாலியல்பலாத்காரத்தில் ஈடுபட்டார்.

இதனால் மனம் நொந்த சுந்தரி, போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் ஞானசேகரனை விசாரணைக்குவருமாறு அழைத்தனர். இதையடுத்து போலீஸ் நிலையம் சென்றார் ஞானசேகரன். போகும்போது ஒரு பாம்பைப்பிடித்து அதை பையில் போட்டுக் கொண்டு சென்றார்.

பையில் என்ன என்று போலீஸார் கேட்டபோது, வழியில் பிடித்த பாம்பு என்று கூறியுள்ளார் ஞானசேகரன்.முதலில் பாம்பை வெளியே போய் விட்டு விட்டு வருமாறு போலீஸார் கூறவே, ஞானசேகரன் பாம்பைபையிலிருந்து எடுத்தார்.

அப்போது அந்த பாம்பு ஞானசேகரன் கையில் பட்டென்று ஒரு போடு போட்டது. இதில் அலறித் துடித்தஞானசேகரனை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஞானசேகரன் பரிதாபமாகஉயிரிழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+