ஓடிப் போன லெஸ்பியன் தோழிகள்
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்த குமரகுரு (33). இவருக்கும் அமுதா (29) என்பவருக்கும் ஜூலை 13ம் தேதிதிருமணம் நடந்தது. தனியார் லெதர் நிறுவனத்தில் அமுதா வேலை பார்த்து வந்தார்.கடந்த 15ம் தேதி சம்பள பாக்கியை வாங்கி வருவதாக கூறி சென்ற அமுதா வீடு திரும்பவில்லை. இதனால்குமரகுரு மற்றும் அவரது உறவினர்களும் அமுதா வேலை செய்த நிறுவனத்துக்கு சென்று விசாரித்தனர். ஆனால்அங்கு அமுதா வரவே இல்லை என் தெரிந்தது.
பின்னர்தான் வீட்டில் இருந்த 11 பவுன் நகைகளையும் எடுத்துக் கொண்டு அமுதா சென்றுவிட்டது தெரியவந்தது.மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் குமரகுரு.
![]() |
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது அமுதா மாயமான அதே நாளில் அவருடன் லெதர் நிறுவனத்தில்வேலை பார்த்து வந்த கலாமேரி என்பவரும் காணாமல் போனது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது:
புதுவை கோபால்கடை பேட்டையை சேர்ந்த கலாமேரி (28) கடந்த 2 ஆண்டுகளாக அமுதா வேலை பார்த்தஅதே நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவருக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (32) என்பவருக்கும் ஆகஸ்ட் 21ம் தேதி திருமணம்நடந்ததுள்ளது. லெதர் நிறுவனத்தில் வேலை செய்தபோது அமுதாவுடன் கலாமேரிக்கு நட்பு ஏற்பட்டது. இந்தநட்பு இருக்கமாகி கடைசியில் இருவருக்கும் இடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டுள்ளது.
![]() |
இதனால் திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்துள்ளனர். பெற்றோர்களின் விருப்பத்திற்காக திருமணத்துக்குஒப்புக் கொண்டுள்ளனர். கணவர்களது உறவால் தங்கள் நட்பு முறிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.ஆடி மாதத்தில் கணவரை பிரிந்து வந்த அமுதா கலாமேரியுடன் அதிக நேரத்தை கழித்திருக்கிறார்.
இதற்கிடையே கலாமேரியை 2வது திருமணம் செய்து கொள்ளும்படி குமரகுருவிடம் அமுதா வற்புறுத்தியுள்ளார்.அதேபோல கலாமேரியும் அமுதாவை திருமணம் செய்து கொள்ள ஆனந்தராஜிடம் கூறியுள்ளார். இருவரின்கணவன்களும் இதை ஏற்கவில்லை.
இந் நிலையில் கடந்த 15ம் தேதி இருவரும் சேர்ந்து வீடுகளை விட்டு ஓடிப் போய்விட்டனர். இவர்கள் எங்குசென்றனர் என்று தெரியவில்லை.
இதுகுறித்து கலாமேரியின் தாய் எல்லம்மாள் கூறுகையில்,
இரண்டு வருஷமாகத்தான் லெதர் கம்பெனியில் எம்பொண்ணு வேலை பார்த்தா. அவளோட வேலை செய்தஅமுதா அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவாள். இரண்டு பேரும் எப்போதும் ஒண்ணா வெளியில் போவாங்க.முதலில் நட்பா பழகுறாங்கன்னு தான் நினைச்சோம்.
ஆனா, கல்யாணத்துக்குப் பிறகும் அமுதா அடிக்கடி வீட்டுக்கு வருவாள். இங்கேயே தான் ரொம்ப நேரம்இருப்பா. நான் கூட இருவரையும் கண்டிச்சேன். ஆனால் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானதால்எனது மகளுக்கு உடனே திருமணம் செய்து வைத்தேன்.
கலாமேரிக்கு திருமணம் முடிந்த பிறகும் அமுதா தொடர்ந்து சந்திச்சுக்கிட்டுதான் இருந்தாள். ஒரு நாள்அமுதாவை கடுமையாக கண்டித்து அனுப்பினேன். அதன் பின்னர் கடந்த 15ம் தேதி டெய்லர்கிட்ட ஜாக்கெட்வாங்கிட்டு வர்றதா பொய் சொல்லிட்டு கலாமேரி போனாள். அதன் பிறகு அவள் வரவே இல்லை என்றார்.














Click it and Unblock the Notifications