உள்ளாட்சித் தேர்தலுக்கு 30 பார்வையாளர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலை பார்வையிட மாவட்டத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் மொத்தம் 30அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுமக்கள் பயம்இல்லாமலும், அச்சமின்றியும் வாக்களிக்கும் வகையில், மாவட்டத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் மொத்தம்30 அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வருகிற 22ம் தேதிநடைபெறும். இவர்கள் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்குப் பின்பு என 3கட்டமாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை யாரும் மீறக் கூடாது. இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது. 3 கார்களுக்கு மேல் அரசியல் கட்சி பிரமுகர்கள் பயன்படுத்தக் கூடாது. தமிழக அரசு புதிய திட்டங்கள்எதையும் அறிவிக்கக் கூடாது என்றார் சந்திரசேகரன்.












Click it and Unblock the Notifications