தாவூத்தை நாடு கடத்த முடியாது: பாகிஸ்தான்
டெல்லி:
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தாவூத் இப்ராகிமைஇந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறிவிட்டது.
சமீபத்தில் கியூபாவில் நடந்த அணி சேரா நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அங்கு பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பைசந்தித்தார். அப்போது இரு நாடுகளும் இணைந்து தீவிரவாத தடுப்பு கூட்டமைப்பைஏற்படுத்த முடிவு செய்தன.இந்த கூட்டு நடவடிக்கை மூலம் தாவூத் இப்ராகிம் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவாரா என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அஜீஸ் அகமது கானிடம்செய்தியாளர்கள் கேட்டபோது,
தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஏற்கனவே பாகிஸ்தான்பலமுறை தெளிவுபடுத்தி விட்டது.
இதுதொடர்பாக இந்தியாவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்பதை பாகிஸ்தான்முன்பே கூறியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தீவிரவாத கூட்டமைப்புக்கும், தாவூத்இப்ராகிம் விவகாரத்துக்கும் தொடர்பு கிடையாது.
எனவே தாவூத் இப்ராகிம், மசூத் அஸார், ஹபீஸ் முகம்மது சயீத் (இந்த இருவரும்இந்திய விமானம் கடத்தப்பட்டபோது விடுவிக்கப்பட்ட தீவிரவாதிகள்)உள்ளிட்டோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதுஎன்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் கான்.