திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகளுடன் அக்கட்சியின் பேச்சுவார்த்தைக் குழுஆலோசனைகளை தொடங்கியுள்ளது.
திமுக சார்பில் ஆற்காடு வீராசாமி தலைமையில் 9 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தைக்காகஅமைக்கப்பட்டள்ளது. இந்தக் குழுவுடன் நேற்று மாலை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தின.முதலில் பாமக குழுவினர் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் அறிவாலயம் வந்தனர். முரசொலிமாறன் அரங்கில் நடந்த பேச்சுவார்த்தையில் பாமக குழுவில் மணி தவிர திருக்கச்சூர் ஆறுமுகம், ஏ.கே.மூர்த்தி,வேல்முருகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, சுமூகமாக நடந்தது. மீண்டும்சனிக்கிழமை பேசுவோம் என்றார். இதேபோல, முஸ்லீம் லீக் சார்பில் தலைவர் சையத் சத்தார் தலைமையிலானகுழுவும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நல்லகண்ணு, மகேந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் சார்பில் வரதராஜன் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி டெல்லி சென்றுள்ளதால் காங்கிரஸ் கட்சி மட்டும் நேற்றையபேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications