இலங்கை எம்பிக்களை சந்திக்க பிரதமர் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை தமிழ் எம்பிக்களை பிரதமர் சந்திக்காததற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி பாராட்டுதெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுவதற்காக இலங்கை தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள்குழு டெல்லி வந்தது. ரா.சம்பந்தம் தலைமையிலான இந்தக் குழுவில் சோனதிராஜா, கஜேந்திரகுமார்,பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் பிரதமரை சந்தித்ததாகவும் இதன் மூலம் ராஜீவுக்கு மன்மோகன் சிங் துரோகம்விளைவித்துவிட்டதாகவும் சுப்பிரமணியம் சுவாமி கூறியிருந்தார்.

ஆனால், அவர்களை பிரதமர் சந்திக்கவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.

இந் நிலையில் சென்னையில் நிருபர்களிடம் சுவாமி கூறியதாவது:

விடுதலைப் புலிகளின் கையாட்களான இலங்கை தமிழ் எம்பிககளை பிரதமரை சந்திக்கவில்லை. இதன் மூலம்ராஜிவின் நினைவுக்கு அவர் மரியாதை தந்துள்ளார். அதே போல இவர்களை முதல்வர் கருணாநிதியும் சந்திக்கக்கூடாது.

இவர்கள் கருணாநிதியை சந்திக்க சென்னை வந்துள்ளனர். அவர்களை கருணாநிதி சந்திக்காவிட்டால்பாராட்டுவேன்.

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் மதிமுக, விடுதலை சிறுத்தைகளோடு ஜெயலலிதா எப்படி கூட்டணிவைத்துள்ளார் என்று தெரியவில்லை. இது அவரது சந்தர்ப்பவாதத்தையே காட்டுகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+