மீண்டும் பெரும் தாக்குதலுக்கு தயாராகும் புலிகள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராணுவத்திடம் இழந்த பகுதிகளை மீட்க புலிகள் பெரும்தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக செய்திகள் கசிந்து வருவதால் மூதூரில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.

இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் மூதூரில் பலர் பலியாயினர்.

ஒரு மாதம் நீடித்த சண்டை சமீபத்தில் ஓய்ந்தது. ஆனால் மீண்டும் மூதூரில் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள்திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படபகிறது. மூதூர் மீது விரைவில் தாக்குதல் நடத்தப் போகிறோம் என்றவாசகங்களுடன் துண்டு பிரசுங்களை புலிகள் வினியோகித்ததாக கிராம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மூதூரில் இருந்து பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுகொண்டுள்ளனர்.

ஆனால் அவர்களை போகவிடாமல் இலங்கை ராணுவம் ஆங்காங்கே தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில்இறங்கியுள்ளது. ஆனாலும் தடைகளை மீறி அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

பேச்சு- அமெரிக்கா வற்புறுத்தல்:

இதற்கிடையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு இலங்கை அரசை அமெரிக்கவற்புறுத்தியுள்ளது.

ஐ.நா.சபை கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் ராஜக்பேஷேயும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரநாயகாவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலிசா ரைஸ்சை சந்தித்தனார்.

அப்போது நார்வே தூதுக்குழுவினரின் சமசர முயற்சிகளை ஏற்று விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தும்படிஇலங்கை அரசை ரைஸ் வற்புறுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+