For Daily Alerts
Just In
திருச்சி அருகே இரட்டைக் கொலை
திருச்சி:
திருச்சி அருகே ஒரு தனியார் நிறுவனத்தின் 2 காவலாளிகள் படுகொலை செய்யப்பட்டனர்.துவாக்குடியில் உள்ள தனியார் பொறியியல் நிறுவனத்தில் காவலாளிகளாக பணியாற்றி வந்த பவுல்ராஜ் (50),சந்தானம் (62) ஆகிய இருவரையும் நேற்றிரவில் 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியது.
கத்தி, அரிவாள்களால் அக் கும்பல் இருவரையும் வெட்டித் தள்ளியது. இதில் இருவரும் அந்த இடத்திலேயேபலியாயினர்.
கொலைக்கான காரணம் தெரியவில்லை. கொலைக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments
Story first published: Monday, September 25, 2006, 5:30 [IST]