தமிழகம்-கேரளத்துக்கு உச்ச நீதிமன்றம் யோசனை
டெல்லி:
முல்லைப் பெரியாறு அணை உயரத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசும் கேரள அரசும் பேச்சுவார்த்தைநடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்துமாறு தமிழக அரசு கோரி வருகிறது. ஆனால், அதை 136அடியாகவே வைத்திருக்க வேண்டும் என கேரளம் கூறுகிறது.இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கேரளம் மதிக்கவில்லை. மாறாக அந்த உத்தரவைசெயலிழக்கச் செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து தமிழகத்தின் முதுகில் குத்தியது.
இந் நிலையில் இந்த விவகாரம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான டிவிசன்பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய கேரள அரசின் வழக்கறிஞர், இந்தப்பிரச்சனையை பேசித் தீர்க்கலாம் என கேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றார்.
இதையடுத்து அணை உயரத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசும் கேரள அரசும் பேச்சுவார்த்தை நடத்திசுமூகத் தீர்வு காண முயல வேண்டும் என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில்,
பேச்சுவார்த்தைக்கான அணுகுமுறை இல்லாதவரை இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க முடியாது. இது போன்றபிரச்சனைகளில் நீதிமன்றம் கடைசி கட்டமாகத் தான் தலையிட வேண்டும். இரு மாநில அரசுகளும்தங்களுக்குள்ளாகவோ அல்லது மத்திய அரசின மூலமோ பேசி சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்றனர்.
முன்னதாக பேசிய தமிழக அரசின் வழக்கறிஞர் பராசரன், கேரள அரசு கொண்டு வந்துள்ள சட்டம் காரணமாகஅணையின் பழுதுபார்ப்புப் பணிகளைக் கூட தமிழக அரசால் மேற்கொள்ள முடியவில்லை என்றார்.
பிரதமர் தீர்வு காணாவிட்டால்...
இதற்கிடையே முல்லை பெரியார் பிரச்சனை குறித்து பிரதமர் உரிய தீர்வு காணாவிட்டால் தமிழ்நாடுஏற்படுத்தியுள்ள முல்லை பெரியாறு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என கேரள நீர்பாசன அமைச்சர்பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து பிரேமசந்திரன் கூறியதாவது,
முல்லை பெரியாறு பிரச்சனை தற்போது பிரதமர் முன்னிலையில் உள்ளது. அவர் இதற்கு உரிய தீர்வுகாணாவிட்டால் தமிழ்நாடு ஏற்படுத்தியுள்ள முல்லை பெரியாறு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
தற்போது உள்ள சூழ்நிலையில் அணை நீர் அளவை உயர்த்த முடியாது. அணைக்கு ஆபத்து ஏற்படவதைஅனுமதிக்க மாட்டோம். பிரதமர் இரு தரப்பினரும் ஏற்கும் முடிவை எடுப்பார் என எதிர் பார்க்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications