சண்முகம் பதவியை பறிக்க கோரி அதிமுக மனு
சென்னை:
மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான எஸ்வி சண்முகத்தின் பதவியைப் பறிக்குமாறு சபாநாயகர்ஆவுடையப்பனுக்கு அதிமுக மனு அனுப்பியுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் 59 பேரும் கையெழுத்திட்ட மனு ஒன்று சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில்,
மதுரை மேற்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சண்முகம் வெற்றி பெற்றார். ஆனால், இப்போது அவர்கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
சட்டசபையில் சுயேச்சையாக செயல்படப் போவதாகவும், திமுகவுக்கு ஆதரவாக செயல்படப் போவதாகவும்அறிவித்துள்ளார்.
இதன்மூலம் அவர் தானாகவே எம்எல்ஏ பதவியை கைவிட முன் வந்துள்ளார். எனவே அரசியலமைப்புச் சட்டம்10வது அட்டவணையின் கீழ் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
இன்னும் காலம் கடத்தாமல் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்கவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக கொறடா செங்கோட்டையன் மற்றும் சில எம்எல்ஏக்கள் இந்த மனுவைசட்டசபை செயலாளரிடம் கொடுத்தனர். சபாநாயகர் சென்னை திரும்பிய பின் இந்தமனு அவரிடம் தரப்படும்.
ஆனால், இந்த மனுவில் எம்எல்ஏவும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கையெழுத்துபோடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சண்முகத்தை கட்சியை விட்டு நீக்கினால் அவரது எம்எல்ஏ பதவி தப்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் அவரை நீக்க முடியாமல் தவித்து வருகிறது அதிமுக தலைமை.