For Daily Alerts
Just In
பெண் வேடத்தில் வந்த திமுக நிர்வாகி!!
கரூர்:
கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை கண்டித்து பெண் வேடம் போட்டு கட்சிகூட்டத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் திமுக நிர்வாகி ஒருவர்.
கரூர் 4வது வார்டின் திமுக பொறுப்பாளராக இருப்பவர் பழனிகுமார். இவர் அந்த வார்டில் கவுன்சிலர் பதவிக்குபோட்டியிட விரும்பினார்.
ஆனால், அந்த பதவிக்கு போட்டியிட வேறு ஒருவரை கட்சி முடிவு செய்தது.
இதையடுத்து திமுகவின் தேர்தல் ஆலோசனை கூட்டத்துக்கு சேலை, ஜாக்கெட் அணிந்து நீண்ட தலைமுடியோடுகிட்டத்தட்ட அரவாணி கோலத்தில் வந்தார் பழனிகுமார்.
முதலில் அவரை அடையாளம் தெரியாமல் தவித்த திமுக தலைகள் பின்னர் அடையாளம் கண்டு கொண்டு,என்ன பழனி இப்பிடி செஞ்சுட்டே, போய் டிரஸ்ஸை மாத்திட்டு வா பேசுவோம் என்று சமாதானம் பேசினர்.
ஆனால், சமாதானமடையாத பழனிகுமார் எனது எதிர்ப்பை தெரிவிக்கவே இப்படி வந்தேன். நீங்கள் சீட்குடுத்தாலும் சரி குடுக்காட்டியும் சரி எனக்கு கவலையில்லை என்று திட்டயபடி வெளிறிேனார். Comments
Story first published: Thursday, September 28, 2006, 5:30 [IST]