2 தமிழக பக்தர்கள் திருப்பதியில் மரணம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதியில் நடந்த பிரம்மோத்சவ விழாவைக் காணச் சென்ற 2 தமிழக பக்தர்கள்மரணமடைந்தனர்.
திருப்பதி, திருமலையில் கடந்த 9 நாட்களாக பிரம்மோத்சவ விழா வெகுவிமரிசையாக நிடந்தது. இதைக் காண பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும்திருமலையில் குவிந்தனர்.அவர்களில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரும் ஒருவர்.பிரம்மோத்சவததை கண்டு களித்து விட்டு சென்னை திரும்ப அவர் பேருந்தில்ஏறினார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சைபலனின்றி சுப்பிரமணியம் இறந்தார்.
இதேபோல தமிழகத்தைச் சேர்ந்த 55 வயதுப் பெண்மணி, ஆகாச கங்கை குளத்தில்மூழ்கி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.












Click it and Unblock the Notifications