தலித் பஞ்சாயத்து தலைவர் போட்டியின்றி தேர்வு
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
தலித் பஞ்சாயத்தான கொட்டக்காச்சியேந்தர் பஞ்சாயத்தின் தலைவராக கருப்பன்போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் மற்றும் விருதுநிகர்மாவட்டம் கொட்டக்காச்சியேந்தல் ஆகிய நான்கு தலித் பஞ்சாயத்துக்களுக்கும் பலகாலமாக தலைவர் பதவியை நிரப்ப முடியாத நிலை நிலவுகிறது.இந்த கிராமங்களில் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர் சமூகத்தினர், தலித்ஒருவர் தங்களுக்குத் தலைவராக வருவதை ஏற்க மறுத்து வருவதால் இந்த அவலநிலை.
இந் நிலையில் தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாப்பாபட்டிபஞ்சாயத்து தலைவராக ஊர் மக்களால் நிறுத்தப்பட்ட பால்சாமி என்பவர்போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோல கொட்டக்காச்சியேந்தல் கிராம பஞ்சாயத்து தலைவராக கருப்பன்போட்டியின்றித் தேர்வாகியுள்ளார். இங்கு எஸ். கருப்பன், வி. கருப்பன் என இரண்டுபேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் வி.கருப்பன் தனது மனுவை திரும்பப்பெற்றதால், எஸ்.கருப்பன் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications