தந்தை-மகள் போட்டி: மகளுக்கு இன்று கல்யாணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே புள்ளிலைன் என்ற ஊராட்சியின் தலைவர் பதவிக்கு தந்தையும், மகளும் போட்டிபோடுகின்றனர். இன்று மகளுக்கு திருமணம் நடக்கிறது.

சென்னை அருகே செங்குன்றத்தை அடுத்துள்ளது புள்ளிலைன் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்குஜெயபால் என்பவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அவரது மகள் ஜான்சிராணியும் போட்டியிடுகிறார்.

ஒரே வீட்டில் இருந்து கொண்டு ஒரே பதவிக்கு அப்பாவும், மகளும் போட்டி போடுவதால் ஊர் மக்கள்வியப்புடன் அவர்களது பிரசாரத்தை வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதில் இன்னொரு வேடிக்கைஎன்னவென்றால் ஜான்சி ராணிக்கு இன்று கல்யாணம் நடக்கிறது.

அவருக்கும் பிரேம்குமார் என்பவருக்கும் ஆண்டார்குப்பம் முருகன் கோவிலில் இன்று திருமணத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. திருமண ஏற்பாடுகளையும் தந்தை ஜெயபால்தான் படு மும்முரமாக பார்த்து வருகிறார்.

தேர்தல் களத்தில் மகள் தன்னை எதிர்த்தாலும் கூட அவரது திருமண ஏற்பாடுகளையும் படு பொறுப்பாக செய்துவரும் ஜெயபாலிடம் மகளே எதிர்த்துப் போட்டியிடுவதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டால்,மக்கள் சேவைக்கு முன்னால் மகள் எல்லாம் எம்மாத்திரம்? எனது மகள் திருமணத்தை முடித்து விட்டு மறுபடியும்தீவிர பிரசாரத்தில் ஈடுபடப் போகிறேன் என்கிறார்.என்னே கடமையுணர்வு..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+