அத்வானியைக் கொல்ல ஐ.எஸ்.ஐ. சதி
Subscribe to Oneindia Tamil
மும்பை:
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியைக் கொலை செய்ய பாகிஸ்தானின்ஐஎஸ்ஐ உளவு அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
மும்பை ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக சிலரை மும்பை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இவர்களில் பைசல் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ஷேக் என்பவர் தான் எங்களைஒருங்கிணைத்து மும்பை தொடர் குண்டுவெடிப்புத் திட்டத்தைத் தீட்டிக் கொடுத்தார்.2002ம் ஆண்டு ஷேக் ஏற்பாட்டின் பேரில் நாங்கள் பாகிஸ்தான் சென்றோம். அங்குஐ.எஸ்.ஐ. அதிகாரிகளை சந்தித்தோம். அப்போது அத்வானி குறித்த தகவல்களைதங்களுக்குத் திரட்டித் தருமாறு ஐஎஸ்ஐ அதிகாரிகள் கூறினர். அத்வானியை கொலைசெய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இத்தகவல்களைத் தெரிவிப்பதற்காக சில தொலைபேசி எண்களையும், இமெயில் முகவரிகளையும் அவர்கள் எங்களுக்குக் கொடுத்தனர் என்று பைசல்தெரிவித்துள்ளார்.
பைசல் அத்வானி குறித்துத் தெரிவித்துள்ள தகவல்கள் குற்றப் பிரிவு போலீஸாரிடம்கொடுக்கப்பட்டு மேல் விசாரணைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்வானியைக் கொலை செய்ய ஐ.எஸ்.ஐ. திட்டமிட்ட தகவல் வெளியாகியுள்ளதால்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications