சென்னைக்கு பூகம்ப ஆபத்து அதிகம்!
சென்னை:
சென்னை நகரில் மண் வளம் குறைந்து வருவதால் பூகம்ப அபாயம் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில்தெரிய வந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் சென்னை நகரில் மண் வளம் குறித்த ஒரு ஆய்வை நடத்தியது. இதன்முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.இந்திய அளவில் பூகம்ப அபாயம் அதிகம் உள்ள பகுதிகளின் பட்டியலில் சென்னை, கோவை, சேலம் ஆகியநகரங்களில் 3வது மண்டலத்தில் உள்ளன. இதன்படி இங்கு பாதிப்பு சற்று குறைவாக இருக்கும்.
ஆனால் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வின்படி சென்னை நகரம் 4வது மண்டலத்திற்குநகர்ந்துள்ளது. அதாவது மிக மிக அதிக ஆபத்து ஏற்படும் பகுதிகளின் பட்டியலில் சென்னை சேர்ந்துள்ளது.
சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் பூகம்ப அபாயம் அதிகரித்துள்ளது. வடபழனி, அடையார், கிண்டி,வியாசர்பாடி, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பூகம்ப ஆபத்து அதிகம் உள்ளதாம்.
சென்னை நகரில் மண் வளம் மிகவும் குறைந்துள்ளதாலும், நகரின் பல பகுதிகளில் மண் வளம் 15 மீட்டர்அளவுக்கு சுத்தமாக இல்லாததாலும் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரில் தற்போதைய சூழ்நிலையில் பூகம்பம் ஏற்பட்டால் அதன் அளவு 6.3 முதல் 7.3 ரிக்டராகஇருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால் கான்க்ரீட் காடாக மாறியுள்ளசென்னைக்கு பெரும் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படும்.
இதேபோல மயிலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டை, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளுக்கும் பூகம்பஆபத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் இங்கு மண் வளம் சற்றே பாதிக்கப்பட்டுள்ளதால், இங்கு பாதிப்பு அதிகம்இருக்காது. அதேசமயம் மக்கள் நெருக்கம் இங்கு அதிகம் இருப்பதால் உயிரிழப்பை நினைத்துக் கூட பார்க்கமுடியாத நிலை உள்ளது.
சாலிகிராமம், நந்தனம், மேற்கு மாம்பலம், அடையார் ஆகிய பகுதிகளிலும் பூகம்ப ஆபத்து அதிகம் உள்ளதாம்.
சென்னை நகரில் பூகம்பம் ஏற்பட்டால் அது மத்திய பகுதியில்தான் இருக்கும் எனவும், அதன் பாதிப்பு வடசென்னை முதல் தென் சென்னை வரை பரவி பெரும் ஆபத்தை உருவாக்கும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications