5 நிமிடத்தில் 3000 ரயில் டிக்கெட்டுகள் காலி!
சென்னை:
சென்னையிலிருந்து மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படவுள்ள தீபாவளி சிறப்புரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்று விட்டதால்,டிக்கெட் இதில் முறைகேடு நடந்திருக்குமோ என்று பயணிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது சென்னையிலிருந்துவெளியூர்களுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் செல்வது வழக்கம். இவர்களில் 90 சதவீதம் பேர் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.தீபாவளிக்கு 2 மாதங்களுக்கு முன்பே இவர்கள் ஊருக்கு டிக்கெட் எடுத்து விடுவார்கள். அதையும் மிஸ்செய்தவர்களுக்காக சிறப்பு ரயில்கள் விடப்படுவது வழக்கம். முன்பெல்லாம் ஒரு ரயிலோ, இரண்டு ரயிலோசிறப்பு ரயிலாக விடுவார்கள். அதுவும் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு மட்டுமே விடப்படும்.
ஆனால் மத்தியில் பாமகவைச் சேர்ந்த ஏ.கே.மூர்த்தி ரயில்வே இணை அமைச்சரானபோது இதை மாற்றினார்.விசேஷ சமயங்களில் நாகர்கோவில் மட்டுமல்லாது, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி என பல்வேறுநகரங்களுக்கும் பல சிறப்பு ரயில்களை இயக்க உத்தரவிட்டார்.
இதனால் ஒவ்வொரு தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களின்போது அதிக அளவிலான சிறப்புரயில்கள் தென் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.
இந்த ஆண்டும் தீபாவளியையொட்டி நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னையிலிருந்து நாகர்கோவில், தூத்துக்குடி, கோவை, மதுரை ஆகிய நகரங்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள்இயக்கப்படுகின்றன. மொத்தம் நான்கு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதற்கான முன்பதிவு இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தீபாவளிக்கு டிக்கெட்போட காலை 5 மணியிலிருந்தே சென்னை எழும்பூர், சென்டிரல், மாம்பலம் என அனைத்து முன்பதிவுநிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.
8 மணிக்கு கவுண்டர்கள் திறக்கப்பட்டன. திறந்த 5வது நிமிடத்திலேயே வெயிட்டிங் லிஸ்ட் எண்ணிக்கை100க்கும் மேல் வரத் தொடங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் இதற்கு மேல் டிக்கெட்உறுதியாகாது என்பது தெரிந்து கடும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கவுண்டர்களைத் திறந்த 5வது நிமிடத்திலேயே டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் எப்படி, இதில் ஏதோமுறைகேடு நடந்திருப்பதாக பயணிகள் கொதிப்படைந்தனர். நான்கு ரயில்களையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 3200படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் உள்ளன. இவற்றுக்கு 5 நிமிடங்களுக்குள் டிக்கெட் வழங்க முடியுமாஎன்பதே பயணிகளின் சந்தேகம்.
ஆனால் இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறது தெற்கு ரயில்வே. ரயில்வே அதிகாரி ஒருவர்கூறுகையில், மக்களின் சந்தேகத்தில் தவறே இல்லை. அவர்களது கேள்வியில் தவறே இல்லை. ஆனால் இதில்முறைகேடுகளுக்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு.
ஏராளமான தனியார் ஏஜென்டுகள், புரோக்கர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது ஆட்களை பல்வேறு ரயில்நிலையங்களுக்கு அனுப்பி முன்பதிவு செய்திருக்கலாம். அவர்களை நாம் எளிதில் அடையாளம் காண முடியாது.
மேலும், சென்னை நகரிலேயே நிறைய முன்பதிவு மையங்கள் உள்ளன. இதுதவிர தமிழகம் முழுவதிலும்ஏராளமான ரயில்வே முன்பதிவு மையங்கள் உள்ளன. எனவே 5 நிமிடங்களில் 3000க்கும் மேற்பட்ட ரயில்டிக்கெட்டுகள் விற்பனையாகியிருப்பது சாத்தியம்தான் என்கிறார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications