உள்ளாட்சி: நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் சுமார் 67,000 உள்ளாட்சி பணியிடங்களுக்கு நாளை, முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளைய தேர்தலில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினகள் 340 பேர், பஞ்சாயத்து யூனியன்வார்டு உறுப்பினர்கள் 3410 பேர், ஊராட்சி மன்ற தலைவர்கள் 6557 பேர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள்50,739 பேர் கிராமப் பகுதிகளில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.நகர்ப்புறப் பகுதிகளில், 4431 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், 462 மூன்றாம் நலை நகராட்சி வார்டுஉறுப்பினர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் 1479 பேர், மாநகராட்சி கவுன்சிலர்கள் 342 பேர் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.
முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. வாக்குச் சாவடிகளில்வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
தமிழக போலீஸார் 1 லட்சம் பேருடன், பிற மாநில போலீஸாரும் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படவுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications