5 நாள் லீவு: அலை மோதிய குடி மகன்கள்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலையொட்டி இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு மதுக் கடைகள் மூடப்பட்டிருக்கும்என்பதால், நேற்று தமிழகத்தின் அனைத்தப் பகுதிகளிலும் டாஸ்மாக் மதுக் கடைகள் முன்பு குடிமக்கள் கூட்டம்கட்டுக்கடங்காமல் அலைமோதியது.
தமிழகத்தில் வருகிற 13 மற்றும் 15 ஆகிய இரு நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. நேற்றுடன்முதல் கட்டப் பிரசாரம் முடிவடைந்தது. 13ம் தேதி மாலை 2வது கட்டப் பிரசாரம் முடிவடைகிறது.நேற்று மாலை முதல் 16ம் தேதி மாலை வரை மதுக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.இதனால் 5 நாட்களுக்கு தொடர்ந்து மதுக் கடைகள் இருக்காது என்பதால் மதுப் பிரியர்கள் பெரும்தர்மசங்கடத்திற்கு ஆளானார்கள்.
தினசரி அடிப்பவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. எனவே முன் கூட்டியே சரக்கை வாங்கிவைத்துக் கொள்வதற்காக நேற்று காலை முதலே டாஸ்மாக் கடைகளை அவர்கள் முற்றுகையிட்டனர்.
தலைநகர் சென்னையில், தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் முன்பு பெரும் கூட்டம் அலைமோதியது.காலையிலேயே ஆயிரக்கணக்கானோர் கடைகளைத் தேடி வந்து விட்டதால் சரக்கை கொடுத்து மாள முடியாமல்டாஸ்மாக் ஊழியர்கள் திணறினர்.
குவார்ட்டர், ஆஃப், ஃபுல் என தங்களது சத்துக்குத் தகுந்த சரக்குகளை வாங்கியபடி சந்தோஷமாக வீட்டைப்பார்த்து நடந்தனர் குடிமக்கள்.
ஐந்து நாள் கடை மூடலை சாதகமாக்கிக் கொண்ட பலர் பிளாக்கில் பாட்டில்களை வாங்கி பதுக்கி வருகின்றனர்.சென்னை குரோம்பேட்டையில் 480 ரம், பிராந்தி பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸார் கைதுசெய்தனர்.
இதேபோல மேலும் இருவரையும் தாம்பரம் பகுதியில் போலீஸார் கைது செய்துள்ளனர். மது பாட்டில்களைமொத்தமாக வாங்குவதும் தடை செய்யப்பட்டிருப்பதாகவும், அதுபோல செய்பவர்கள் கடுமையாகதண்டிக்கப்படுவார்கள் எனவும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
இதே நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கடைகளிலும் நிலவியது. காலை முதலே ஆயிரக்கணக்கானகுடிமக்கள் பாட்டில் வாங்க குவிந்ததால் பல இடங்களில் போலீஸார் தலையிட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்தி,வரிசையில் நிறுத்தி, வாங்க வைத்து சந்தோஷமாக வழியனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications