உள்ளாட்சி: முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தது
சென்னை:
வன்முறையுடன் கூடிய தமிழக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவுஇன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. சுமார் 60 சதவீத வாக்குகள் இதில்பதிவாகியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 மாநகராட்சிகள் உள்பட மொத்தம் 28,000 உள்ளாட்சி அமைப்புகளில்,சுமார் 67,000 பதவியிடங்களுக்கு இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்தது.காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தது. சென்னைமாநகராட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் வன்முறை மூண்டது.பொதுமக்கள் சகஜமாக வாக்களிக்க முடியாத அளவுக்கு பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பெரும் ரகளை நடந்தது.
கள்ள ஓட்டு, வாக்குப் பெட்டிகளை கொளுத்துவது, வாக்குச் சீட்டுக்களை கிழிப்பது,வேட்பாளர்களுக்கு வெட்டு, குத்து என பெரும் ரகளையுடன் சென்னை மாநகராட்சிதேர்தல் நடந்தது.
இதைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் பெரிய அளவில் அசம்பாவித சம்பங்கள்ஏதுமின்றி வாக்குப் பதிவு அமைதியாக இருந்தது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவுக்கு வந்தது. இதில் 60 முதல் 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம்என கருதப்படுகிறது.
அடுத்த கட்ட வாக்குப் பதிவு 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications