முதல் கட்ட தேர்தலில் 60% வாக்குகள் பதிவு
சென்னை:
முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையர்சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பதிவு முடிந்த பின்னர் மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன்செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் சென்னை, மானாமதுரை ஆகியஇடங்களைத் தவிர மற்ற இடங்களில் மிக மிக அமைதியாக வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது.வன்முறையால் பாதிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் மொத்தம் 18 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்தப்படும். சென்னையில் மட்டும்13 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடைபெறும்.
இந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னை மாநகராட்சியில் 45 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளன.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 311 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சியில் ஒரு சிலஇடங்கள் தவிர பெரும்பாலும் வாக்குப் பதிவு அமைதியாகவே நடந்தது.அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் 6 மாநகராட்சிகளில் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சோதனைஅடிப்படையில் பயன்படுத்தும் திட்டம் உள்ளது என்றார் சந்திரசேகரன்.












Click it and Unblock the Notifications