கைதான அதிமுக எம்.எல்.ஏக்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சித் தேர்தலில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அதிமுகஎம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

சென்னை மாநகராட்சிக்கு நேற்று நடந்த தேர்தலின்போது பெரும் வன்முறை நடந்தது. கிட்டத்தட்ட அனைத்துவார்டுகளிலும் வாக்குச் சீட்டுக்களை கிழிப்பது, சூறையாடவது, கள்ள ஓட்டுப் போடுவது சரமாரியாக நடந்தது.

பல இடங்களில் வன்முறை, அடிதடி, வெட்டுக் குத்தும் நடந்தது. திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக்கூறி அதிமுக, மதிமுக, தேமுதிக, பாஜகவின ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் சேகர்பாபுவை போலீஸார் கட்டி இழுத்து அழைத்துச்சென்று கைது செய்தனர். இதேபோல கலைராஜன் எம்.எல்.ஏ. மீதும் தடியடி நடத்தி போலீஸார் கைது செய்தனர்.

பூங்கா நகர் அதிமுக எம்.எல்.ஏ. சீனிவாசனையும் போலீஸார் கைது செய்தனர். அத்தோடு ஏராளமானஅதிமுகவினரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டிருந்தனர். நேற்று மாலை அதிமுகஎம்.எல்.ஏக்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் வன்முறை தொடர்பாக வழக்குதொடரப்பட்டுள்ளவர்களை மட்டும் போலீஸார் விடுவிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+