அணு ஆயுதம்: ஆசிய நாடுகளுக்கு யு.எஸ். எச்சரிக்கைஅணு ஆயுதம்: ஆசிய நாடுகளுக்கு யு.எஸ். எச்சரிக்கை
வாஷிங்டன்:
வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை பின்பற்றி ஆசிய நாடுகள் அணு ஆயுதப் போட்டியில் இறங்கினால்விபரீத விளைவுகள் ஏற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சியில், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் விவகாரத்துறைக்கான வெளியுறவு துணைஅமைச்சர் கிறிஸ்டோபர் ஹில் பேசுகையில், வட கொரியாவின் அணு ஆயுத சோதனையைத் தொடர்ந்து மேலும்சில ஆசிய நாடுகள் அணு ஆயுதப் போட்டியில் குதிக்கக் கூடிய சூழ்நிலை நிலவுவதாக அமெரிக்கா கருதுகிறது.ஆனால் இது மிகப் பெரிய ஆபத்தாக முடியும். அந்த நாடுகளுக்கு மட்டுமல்லாது ஆசிய கண்டத்திற்கும் இதுபெரிய பின்விளைவை ஏற்படுத்தும்.
தங்களது சுய பாதுகாப்புக்காக அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை உருவாக்க வேண்டும் என அந்த நாடுகள்நினைக்கக் கூடாது. வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களை எப்படி உலகம், அமெரிக்காவும் ஏற்றுக்கொள்ளவில்லையோ, அதேபோல ஆசிய நாடுகளின் அணு ஆயுதப் போட்டியையும் உலக நாடுகள்அனுமதிக்காது.
வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும், மோசமான பாதைக்கு ஆசியகண்டத்தைத் திருப்பும் செயலிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் அந்த நாடு மீது பொருளாதார தடைகளைகொண்டு வர வேண்டியது அவசியமாகும்.
இந்த பொருளாதார தடையை மிகக் கடுமையாக அமல்படுத்த வேண்டும். சர்வதேச சமுதாயத்தை மிரட்டும்வகையிலான தனது போக்கை வட கொரியா புரிந்து கொள்ள வேண்டும் என்றார் ஹில்.
ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், ஹில் பேசியிருந்தாலும் கூட ஈரானை மனதில் கொண்டேஅவர் இவ்வாறு பேசியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications