மறு தேர்தல் நடத்த வேண்டும்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செனனை மாநகராட்சிக்கு மீண்டும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என தேமுதிக தலைவரும், நடிகருமானவிஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் நேற்று நடந்த முறைகேடுகள் குறித்து மாநகர காவல்துறை ஆணையர் லத்திகாசரணை சந்தித்து விஜயகாந்த் புகார் கொடுத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்தஉள்ளாட்சித் தேர்தலிலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறின. இப்போது திமுகவினர் அராஜகம்செய்கிறார்கள்.

வழக்கமாக பிற்பகலுக்கு மேல்தான் கள்ள ஓட்டுப் போடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால்வாக்குப் பதிவு தொடங்கிய அரை மணி நேரத்திலேயே, அதாவது 7.30 மணிக்கே கள்ள ஓட்டை தொடங்கிவிட்டனர்.

தேர்தல் வன்முறை தொடர்பாக ஆணையர் லத்திகா சரணிடம் புகார் தெரிவித்துள்ளேன். ஆனால் அவரது பதிலில்எனக்கு திருப்தி இல்லை.

நான் தெய்வத்தை நம்புகிறவன். அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். எனவேஅராஜகத்தை தெய்வம் நின்று கொல்லும்.

எனது ஓட்டு உள்ள சாலிகிராமத்தில் ஒட்டுப் போட கிளம்பினேன். ஆனால் அங்கு கள்ள ஓட்டுக் கும்பல் படுமும்முரமாக கள்ள ஓட்டுப் போடுவதாக கேள்விப்பட்டு மனம் நொந்து போய் விட்டேன். ஓட்டுப் போடவேஎனக்கு மனம் வரவில்லை. இதனால் வாக்களிக்காமல் திரும்பி விட்டேன்.

சென்னை மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும். கள்ள ஓட்டுக்களும், வன்முறையும் இந்த தேர்தலைகேலிக்கூத்தாக்கியுள்ளன. ராணுவ பாதுகாப்புடன், மத்திய தேர்தல் ஆணையத்தின நேரடி மேற்பார்வையில் இந்ததேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+