ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சித் தேர்தல் வாக்குப் பதிவின்போது நடந்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்றஉள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் விஜயகாந்த்.அப்போது அவர் பேசுகையில், இந்தத் தேர்தலில இந்த அளவுக்கு வன்முறை எதற்காக நடந்தது தெரியுமா?எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, உள்ளாட்சித் தேர்தலில் எங்களது கட்சி அதிக அளவில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

எங்களது கட்சி கடந்த ஒரு வருடமாக அதிக அளவில் செல்வாக்கு பெற்று வந்ததால் அதனைத் தடுக்க இவ்வாறுநடந்துள்ளது. உங்களிடம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள் என்று யாராவது கேட்டார்களா.?

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட பல சுயேச்சைகள் உள்பட வேட்பாள்கள் தங்களது வீட்டில் இருந்த நகை,பொருட்களை வைத்து செலவு செய்துள்ளனர். அதெல்லாம் இப்போது வீணாகி விட்டது. டிஜிபியும், கமிஷனரும்,தேர்தல் ஆணையம் தேர்தல் அமைதியாக நடந்ததாக கூறுகிறார்கள்.

ஒரு புகாரும் வரவில்லை என்கிறார்கள். எந்தப் புகாரை இவர்கள் வாங்கினார்கள்? புகார் கொடுக்கசென்றவர்களையே அடித்து விரட்டியிருக்கிறார்கள். கருணாநிதி ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார். தொல்காப்பியம்,திருக்குறள், இலக்கியம் பற்றிப் பேசுகிறார்.

இவ்வளவு பேசிய இவர், அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். இவருக்கு இப்படிப்பட்ட பதவிதேவைதானா? நூற்றுக்கு நூறு என்று விளம்பரம் செய்கிறார்கள். இந்த அராஜகம் தான் நூற்றுக்கு நூறு சாதனையா? காலை 9மணிக்கே வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் பதிவு முடிந்து விட்டது. கருப்பு நிற பேன்ட்டும், வெள்ளை நிற சட்டையும்போட்டிருந்த குண்டர்கள் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்குகளைப் போட்டுள்ளனர்.

அவர்களை காவல்துறையும் தடுக்கவில்லை. தடுக்கக் கூடாது என்பது மேலிடத்தின் உத்தரவு. இப்படிப்பட்டஆடையைப் போடுபவர் யார் தெரியுமா.? ஸ்டாலின் தான். கருப்பு நிற பேன்ட்டும், வெள்ளை நிற சட்டையும்அணிவது அவர் வழக்கம். எனவே இந்த அராஜகத்திற்குப் பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.

வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக முதல்வர் கூறுகிறார். வாக்குச் சாவடிகளை மூடி விட்டு ஓட்டுப்போட்டால் பிரகாசமாகத்தானே இருக்கும். எங்கே மறு தேர்தல் நடத்த உத்தரவிடுங்கள் பார்ப்போம்.

எனக்கு பத்திரிக்கையாளர்களைத் தவிர வேறு யாரும் ஆதரவு இல்லை. தெய்வம் ஒன்று இருக்கிறது. அதுபார்த்துக் கொள்ளும் என்றார் விஜயகாந்த். பேட்டியின்போது அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் ரா வசந்தன் ஆகியோரும் இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+