திமுகவில் இணைந்த அதிமுக, மதிமுக வேட்பாளர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுகவுடன் இணைந்து மதிமுகவும் வன்முறையில் ஈடுபட்டதாக அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில்இணைந்துள்ள சென்னை அண்ணா நகர் பகுதி செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் அண்ணா நகர் 78வது வார்டில் மதிமுக சார்பில் போட்டியிடும் ரெட்சன்அம்பிகாபதி தனது ஆதரவாளர்களுடன் நேற்று திமுகவில் இணைந்தார்.பின்னர் அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னை மாநகராட்சித் தேர்தலில்அதிமுகவினருடன் இணைந்து மதிமுகவினரும் வன்முறையில் ஈடுபட்டது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.இதனால் தான் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளேன் என்றார்.
இதேபோல அதிமுக வேட்பாளர்கள் இருவரும் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.அவர்களும் அதிமுகவும், மதிமுகவும் இணைந்தே வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினர்.












Click it and Unblock the Notifications