ஜெ.வின் அபாண்டம்: இளங்கோவன் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதை மறைத்து விட்டு திமுக கூட்டணி மீது ஜெயலலிதா வீண் பழி சுமத்துவதாக மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று ஏற்கனவே தமிழக மக்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர்.மத்திய, மாநில அரசுகளோடு இணக்கமாக போகும் கட்சிகளை ஆதரித்தால் மட்டுமே சாலை மேம்பாடு, குடிநீர், சுகாதாரத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.இதனால்தான் தோல்வி பயத்தில் எதிர் அணியினர் வன்முறை, அராஜகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும். இதை ஜெயலலிதாவால் பொறுக்க முடியவில்லை. எனவேதான் அதிமுகவினரைத் தூண்டி வன்முறையை ஏவி விட்டு அதை திமுக மீது பழியைப் போடுகிறார்.
திமுக கூட்டணி மீது அபாண்டமாக ஜெயலலிதா பழி சுமத்துவது கண்டனத்துக்குரியது என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications