லத்திகா சரணை முற்றுகையிட்டு போராட்டம்
சென்னை:
சென்னை அருகே திருவொற்றியூரில் கள்ள ஓட்டு போட்டவர்களை கைது செய்யக் கோரி சென்னை மாநகரகாவல்துறை ஆணையர் லத்திகா சரணை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
திருவொற்றியூரில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் இன்று காலை 10 மணியளவில் சிலர் கும்பலாக வந்து வாக்குச்சாவடிக்குள் புகுந்து கள்ள ஓட்டுப் போட்டனர்.இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள், அவர்களின்ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் வந்தார். அவரைப் பார்த்ததும் அனைவரும்அவரை முற்றுகையிட்டு கள்ள ஓட்டுப் போட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி கோஷமிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை லத்திகா சரண் சமாதானப்படுத்தினார். முறையான ஆவணங்களை வைத்துள்ளவர்களை ஓட்டுப் போடஅனுமதிக்குமாறும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். அதன் பின்னர் அங்கு அமைதிதிரும்பியது.
இதேபோல புழல் பகுதியிலும் சிலர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து ஓட்டுப் பெட்டிகளை எடுத்துச் சென்ற சம்பவம்நடந்தது. இதனால் பலர் ஓட்டுப் போடாமல் திரும்பிச் சென்றனர்.
ஸ்ரீரங்கம்:
இதற்கிடையே, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று காலைதகவல் பரவியது. இதனால் அங்கு போலீஸார் அதிகப்படுத்தப்பட்டனர்.
அப்பகுதியில், யாரும் ஓட்டுப் போடாமல் தடுக்கும் வகையிலேயே இந்த வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
அதிமுக வேட்பாளரின் கார் எரிப்பு:
திருச்சி உறையூரில் அதிமுக வேட்பாளர் வனிதாவின் காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உறையூரில் உள்ள ஆல் செயின்ட்ஸ் நடுநலைப் பள்ளி வாக்குச் சாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வனிதாவின் காரை சிலர் தீவைத்துக் கொளுத்தினர்.இதைக் கேள்விப்பட்டதும் அங்கு விரைந்து வந்த வனிதாவும், 50க்கும் மேற்பட்ட அதிமுகவினரும் சாலை மறியலில் குதித்தனர். இதனால் அங்குபரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications