ஜெ. வழக்கை சந்திப்போம்: ஆற்காடு வீராசாமி
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க திமுக தயார் எனஅமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006 வரை தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தல்களிலும், சைதாப்பேட்டை, அச்சரப்பாக்கம், சாத்தான்குளம் போன்ற சட்டசபைஇடைத் தேர்தல்களிலும், சென்னை மாநகராட்சி மாமன்றத் தேர்தலிலும்அராஜகத்தையும், வன்முறைகளையும் மட்டுமே கைக் கொண்டு வெற்றி பெற்றுவந்திருக்கும் ஜெயலலிதா, இன்று தமிழக முதல்வர், கழக முன்னணியினர் மீதுவழக்குப் போடப் போவதாக கூறியுள்ளார்.
2001ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மன்ற 131, 110வது வார்டு இடைத் தேர்தலில்அவர் முதலமைச்சராக இருந்து கட்டவிழ்த்து விட்ட வன்முறைவெறியாட்டங்களையும், மு.க.ஸ்டாலின் மீது பொய் வழக்கு போட வேண்டும் என்றுகாவல்துறை அதிகாரி சுனில் குமாரை மிரட்டியதையும், பொய் புகார் கொடுக்கமாட்டேன் என சுனில்குமார் மறுத்து விட்ட காரணத்தால், அவரை இதே ஜெயலலிதாஇடமாற்றம் செய்து அவருக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்காமல் இருந்ததையும்சென்னை மக்கள் நன்கு அறிவர்.
இதை மறைத்து விட்டு கழகத் தலைவர் கருணாநிதி மீது ஜெயலலிதா வழக்குதொடர்ந்தால் அந்த வழக்கை சந்திக்க கலைஞரும், பொதுச் செயலாளர்பேராசிரியரும், நானும் தயாராக இருக்கிறோம். ஜெயலலிதா எப்போது வழக்குப்போடப் போகிறார் என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக ஆற்காடு வீராசாமி












Click it and Unblock the Notifications