For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி எப்ஐஆர்: வக்கீல் வீட்டில் ரெய்டு!

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:போலி எப்.ஐ.ஆர். வழக்கில் தொடர்புடைய கடலூர் வழக்கறிஞர் வீட்டில் இன்றுசிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

போலி எப்.ஐ.ஆரைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான இன்சூரன்ஸ் பணத்தை மோசடிசெய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த மோசடி தொடர்பாக சிபிஐவிசாரணை நடந்து வருகிறது.

விசாரணையின் ஒரு கட்டமாக கடலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவமணி என்பவரின்வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். கடலூர் சீதாரம் நகரில்சிவமணியின் வீடு உள்ளது.

இங்கு இன்று காலை சென்னையிலிருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் வீட்டைப் பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். உதவி எஸ்.பி. சுந்தரராஜன் தலைமையிலானசிபிஐ குழுவினர் காலை 7 மணிக்கு சோதனையைத் தொடங்கி பிற்பகல் 12மணிவாக்கில்தான் முடித்தனர்.

சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இருப்பினும்இதுகுறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்க சுந்தரராஜன் மறுத்து விட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X