கருணாநிதியிடம் கெளஸ் பாட்ஷா ஆசி!
சென்னை:மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகியுள்ள கெளஸ் பாட்ஷாசென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து அவரது வாழ்த்தைப் பெற்றார்.
மதுரை மத்திய தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுகவின் கெளஸ் பாட்ஷாஅமோக வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். வெற்றி பெற்றதும் அதற்கானசான்றிதழை தேர்தல் அதிகாரி மூக்கையாவிடமிருந்து பெற்றார் பாட்ஷா.
இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காகவிமானம் மூலம் சென்னைக்கு வந்தார் பாட்ஷா. அவருடன் மு.க.அழகிரியும் உடன்வந்தார்.
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு சென்ற கெளஸ் பாட்ஷா அவரிடம்வெற்றிச் சான்றிதழை கொடுத்து ஆசி பெற்றார். பாட்ஷாவுக்கு கருணாநிதி வாழ்த்துதெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள்,அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இருந்தனர்.












Click it and Unblock the Notifications