சென்னை: 27 சாவடிகளில் மறு வாக்குப் பதிவு
சென்னை:சென்னை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை 20ம் தேதி எண்ணலாம் எனசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலை ரத்து செய்யக் கோரியும், வாக்குஎண்ணிக்கைக்குத் தடை கோரியும் அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார்உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை கடந்த 2 நாட்களாக நீதிபதிகள் கோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லாஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. நேற்று தேர்தல் ஆணையர்சந்திரசேகரன், மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரணை நேரில் வரவழைத்துவிசாரணை நடந்தது.
இதையடுத்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்குமாறு நீதிபதிகள்உத்தரவிட்டனர். இதனால் சென்னையில் மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கைநடைபெறவில்லை.
இந்த நிலையில் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. தேர்தல்ஆணையம் சார்பில் தலைமை அரசு வழக்கறிஞர் விடுதலையும், அதிமுக சார்பில்ஜோதியும் ஆஜராகினர்.
வழக்கறிஞர்களின் வாதம் இன்று மாலை முடிவடைந்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரம்சூடான விவாதம் நடந்தது. இதையடுத்து நீதிபதிகள் தங்களது தீர்ப்பை வழங்கினர்.அதன்படி 12 வார்டுகளுக்குட்பட்ட 27 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவுநடைபெற வேண்டும்.
அதைத் தொடர்ந்து 155 வார்டுகளிலும் 20ம் தேதி வாக்கு எண்ணிக்கையைநடத்தலாம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications