சேலம்: அதிமுகவுக்கு ஆப்பு வைத்த தேமுதிக
சென்னை:சென்னை மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (வெள்ளிக்கிழமை)நடக்கிறது. அதே போல வன்முறை நடந்த 27 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தலும்நாளையே நடக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாநகராட்சியின் 12வார்டுகளுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடக்கிறது.
சென்னை மாநகராட்சி தேர்தலை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார்உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தேர்தலை ரத்து செய்யவும், வாக்குஎண்ணிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை கடந்த 3 நாட்களாக நீதிபதிகள் கோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லாஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. விசாரணையின் இறுதியில், நேற்று மாலைநீதிபதிகள் இடைக்கால உத்தரவை வழங்கினர்.
அதன்படி, தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தபடி 11, 12, 13, 15, 28, 59, 64,69, 97, 137, 147,151 ஆகிய 12 வார்டுகளில் உள்ள 27 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.
அதே நேரத்தில் பிற வார்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியைத்தொடங்கலாம்.
இருப்பினும் வெற்றி பெற்றவர்களுக்குத் கொடுக்கப்படும் சான்றிதழில், இது வழக்கின்இறுதித் தீர்ப்பைப் பொறுத்தது ஆகும் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
மேலும் வழக்கு விசாரணை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நாளை காலை 7 மணிக்கு 12 வார்டுகளிலும் மறு வாக்குப் பதிவுதொடங்குகிறது. மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். இந்த மறுவாக்குப் பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல வாக்குஎண்ணிக்கை நடைபெறவுள்ள மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாக்களித்த அதே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்காளர்கள்வாக்களிக்கலாம்.