இது மக்கள் தந்த அன்புப் பரிசு: கிருஷ்ணசாமி
சென்னை:முதல்வர் கருணாநிதியின் மகத்தான சாதனைகளுக்கு மக்கள் தந்த அன்புப் பரிசுதான்உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிகூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் சோனியா காந்திதலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தமிழகத் தலைவர் முதல்வர்கருணாநிதியின் மகத்தான சாதனைகளுக்கு மக்கள் தந்த அன்புப் பரிசுதான் இந்தவெற்றி.
கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றித் தந்ததன் மூலம் மக்கள் அடைந்தபயன்களின் பிரதிபலிப்பே இந்த வெற்றி. மத்திய, மாநில அரசுகளின் இணக்கமானசெயல்பாடுகளால் தமிழகம் பெற்று வரும் வளர்ச்சிக்கு மக்கள் தந்த மகிழ்ச்சியானவாழ்த்துதான் இந்த வெற்றி.
இந்த வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கும், அதற்காக உழைத்த காங்கிரஸ் மற்றும்தோழமைக் கட்சித் தோழர்களுக்கும் எனது நன்றிகள், முதல்வருக்கு எனதுவாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications