சென்னை மாநகராட்சியையும் கைப்பற்றியது திமுக
சென்னை:சென்னை மாநராட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.அதிமுகவுக்கு வெறும் 4 வார்டுகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், 12வார்டுகளுக்குரிய 27 வார்டுகளில் மட்டும் நேற்று முன்தினம் மறு வாக்குப் பதிவுநடந்தது. அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் மீதமுள்ள 143 வார்டுகளில்பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
முதல் சுற்றிலிருந்தே திமுக கூட்டணி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர்.விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை நேற்று மாலை தான் முடிவடைந்தது.
மொத்தம் உள்ள 155 வார்டுகளில் 90 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸ் கட்சி 38 வார்டுகளையும், பாமக 17 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி 2 வார்டுகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
அதிமுக வெறும் 4 வார்டுகளில் மட்டுமே வெற்ற பெற்றுள்ளது. அதன் கூட்டணிக்கட்சியான மதிமுகவுக்கு 1 இடம் மட்டுமே கிடைத்துள்ளது.
அதே நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி கூட ஒரு இடத்தில் வென்று காட்டியுள்ளது.
இதன் மூலம் மற்ற 5 மாநகராட்சிகளைப் போலவே சென்னை மாநகராட்சித்தேர்தலிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.
திமுக கூட்டணியிலிருந்து விலகி 8 வார்டுகளில் தனித்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை.
திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 155இடங்களில் இக்கூட்டணி 149 வார்டுகளில் வெற்றி பெற்று அசைக்க முடியாதபலத்துடன் மாநகராட்சிக்குள் நுழைகிறது.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 6 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றிவிட்டது.












Click it and Unblock the Notifications