தோற்றவரை ஜெயிக்க வைக்க முயன்ற அதிகாரி!
நாகப்பட்டனம்:நாகப்பட்டனம் ஊராட்சி ஒன்றியத்தில் தோல்வி அடைந்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக கூறி சான்றிதழ்கொடுத்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஒன்றியத்தின் 9வது வார்டில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல்கல்லூரி வளாகத்தில் நடந்தது. அதில் அதிமுக வேட்பாளர் கலைச் செல்வி 1,297 வாக்குகளும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உஷாராணி 1,287 வாக்குகளும் பெற்றனர்.
கலைச் செல்வி 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுலகம்அறிவித்தது. ஆனால் தேர்தல் அதிகாரியோ, சிபிஎம் வேட்பாளர் உஷாராணி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.அதேசமயம், கலைச் செல்வியிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனால் பெரும் குழப்பம் நிலவியது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டது. குழப்பம் விளைவித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications