வங்கக் கடலில் புயல் சின்னம்- தமிழகத்தில் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடையவுள்ளது.
கடந்த சில நாட்களாகவே பருவ மழை கொட்டத் தொடங்கியுள்ளது. இந் நிலையில் காற்றழுத்தத் தாழ்வுநிலையும் உருவாகியுள்ளதால் அடுத்த இரு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,
தமிழகத்தில் குன்னூரில் தான் அதிகபட்சமாக மழை பெய்துள்ளது. மண்டபம், பாளையங்கோட்டையிலும் கனமழை பெய்துள்ளது. இப்போது காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மாநிலம் முழுவதும் பரவலாக மேலும் மழைபெய்யும் என்றார்.
இந் நிலையில் இன்று சென்னையில் மழை இல்லை. இரு நாட்களாக பெய்து வந்த மழை நின்று வெயில் அடித்துவருகிறது.












Click it and Unblock the Notifications