சேலத்தில் தேமுதிக கவுன்சிலர்கள் கடத்தல்
சேலம்:சேலம் மாவட்டத்தில் 3 தேமுதிக ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர்கள் கார்களில்கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில், தேமுதிகவுக்கு சேலம் மாவட்டத்தில், 41 கவுன்சிலர் பதவிகிடைத்துள்ளது. சேலம் மாநகராட்சியில் 3 வார்டுகளையும் தேமுதிக பிடித்துள்ளது.இதுதவிர 11 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளையும், பேரூராட்சிஉறுப்பினர் பதவியையும் தேமுதிக வென்றுள்ளது.
சில பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவிக்குதேமுதிகவினரின் ஆதரவும் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில்உட்கட்சிப் பூசலால் திமுக கூட்டணிக் கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது.
இப்படி பல வகைகளில் கவுன்சிலர் ஆதரவு பற்றாக்குறை இருப்பதால் தேமுதிககவுன்சிலர்களின் ஆதரவு இருந்தால்தான் சில இடங்களில் தலைவர் பதவிக்குபோட்டியிடுபவர் வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் தேமுதிகவைச் சேர்ந்த 3 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களை சிலர்கடத்திச் சென்று விட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய 12வது வார்டு தேமுதிக கவுன்சிலர்முருகன். இவரை நேற்று பிற்பகல் ஒருவர் வந்து அழைத்துச் சென்றார்.
பின்னர் அங்கிருந்த ஒரு காரில் காத்திருந்தவர்கள் முருகனை கட்டாயப்படுத்திகடத்திச் சென்று விட்டனர். இதேபோல 6வது வார்டு கவுன்சிலர் பாலகிருஷ்ணன்,20வது வார்டு உறுப்பினர் சரஸ்வதியையும் சிலர் கடத்திச் சென்றுள்ளனர். அடுத்தடுத்து3 பேர் கடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் 10வது வார்டு தேமுதிக கவுன்சிலர்வரதராஜனையும் சிலர் கடத்தினர். ஆனால் தேமுதிக தொண்டர்கள் அந்த முயற்சியைமுறியடித்து வரதராஜனை காப்பாற்றினர்.
கடத்தப்பட்ட சேலம் மாவட்ட கவுன்சிலர்கள் குறித்து தலைவாசல் மற்றும் ஏத்தாப்பூர்காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் மீது நம்பிக்கைஇல்லாமல் மாவட்ட தேமுதிக சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுகடத்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக 607 உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றி முக்கியகட்சிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இக்கட்சிக்கு 16 மாநகராட்சி கவுன்சிலர்கள், 71நகராட்சி கவுன்சிலர்கள், 27 மூன்றாம் நிலை நகராட்சி கவுன்சிலர்கள், 234 பேரூராட்சிகவுன்சிலர்கள், 244 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 15 மாவட்ட ஊராட்சிஉறுப்பினர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி ஆரம்பித்து பல காலமாகி விட்ட மதிமுகவுக்கு 527 இடங்களும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு 349 இடங்களும், பாஜகவுக்க 228 இடங்களும், இந்தியகம்யூனிஸ்ட் கட்சிக்கு 196 இடங்களும் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், ஒன்றரைவருடமே ஆகும் தேமுதிகவுக்கு 607 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications