வீடு திரும்பினார் தனுஷ்கோடி ஆதித்தன்
சென்னை:சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர்தனுஷ்கோடி ஆதித்தன் 3 மாத சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி விமான நிலையம் அருகே நடந்த சாலை விபத்தில் தனுஷ்கோடி ஆதித்தன்மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கினர். இதில் தனுஷ்கோடி ஆதித்தன் படுகாயமடைந்தார். அவரது மனைவிபரிதாபமாக இறந்தார். மகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
முதலில் தூத்துக்குடியில் தனுஷ்கோடி ஆதித்தனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரது வலது கரம்அறுவைச் சிகிச்சை மூலம் துண்டித்து எடுக்கப்பட்டது. அதன் பின்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குஅவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆதித்தனின் இரண்டு தொடைகளிலும் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்துஅவரது உடல் உறுப்புகள் சகஜ நிலைக்குத் திரும்பின. இந்த நிலையில், நேற்று இரவு தனுஷ்கோடி ஆதித்தன்டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள மகள் வீட்டில் ஆதித்தன் தற்போது தங்கியுள்ளார். நன்றாக எழுந்து நடப்பதற்கு இன்னும் 2மாதங்கள் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தினசரி பிசியோதெரபி சிகிச்சை அளிக்கவும் டாக்டர்கள்பரிந்துரைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications