அமைதிப் பேச்சு: புலிகள் குழு ஜெனீவா பயணம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:ஜெனீவா நகரில் வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் எஸ்.தமிழ்ச் செல்வன் ஜெனீவா கிளம்பினார்.

நார்வே மத்தியஸ்தக் குழுவினரின் முயற்சியால் நின்று போயிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசும், விடுதலைப் புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தையில் மீண்டும்பங்கெடுக்க சம்மதம் தெரிவித்தன.

இதையடுத்து வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஜெனீவா நகரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மீண்டும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர்எஸ்.தமிழ்ச் செல்வன் இன்று காலை கிளிநொச்சியிலிருந்து சிறப்பு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கிளம்பிச்சென்றார்.

தமிழ்ச் செல்வனுடன், நார்வே நாட்டுத் தூதர் ஹன்ஸ் பிராட்ஸ்கரும் அதே ஹெலிகாப்டரில் உடன் சென்றார்.தமிழ்ச் செல்வன் தலைமையிலான புலிகள் குழுவில் அமைதி செயலக தலைவர் எஸ். புலித்தேவன், காவல்துறைதலைவர் பி.நடேசன், ராணுவ செய்தித் தொடர்பாளர் இளந்திரையன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.இவர்கள் இன்று பிற்பகலுக்கு மேல் ஜெனீவா செல்கின்றனர்.

இதேபோல அரசுக் குழுவின் தலைவரான இலங்கை அரசின் அமைதி செயல தலைவரும், அமைச்சருமான நர்மல்ஸ்ரீபாலா டி சில்வா நாளை காலை ஜெனீவா கிளம்பிச் செல்கிறார். குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஏற்கனவேஜெனீவா சென்று விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+