பவார் கட்சியில் இணைகிறார் திண்டிவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:அதிமுகவை நம்பி காங்கிரஸிலிருந்து வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கி வீணாய் போன திண்டிவனம்ராமமூர்த்தி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி. கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்புஜெயலலிதாவுடன் கைகோர்த்துக் கொண்டு கட்சிக்குள் போர்க்கொடி உயர்த்தினார். இதனால் அவரைகட்சியிலிருந்து நீக்கி மேலிடம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஜெயலலிதாவின் ஆசியோடு தமிழக ஜனநாயக காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார்.ஆனால், அதிமுக கூட்டணியில் இணைந்த ராமமூர்த்திக்கு ஒரு சீட் கூட தரவில்லை ஜெயலலிதா. இதனால்ராமமூர்த்தி மட்டுமல்லாது அவரோடு காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியவர்களும் அதிர்ச்சியில்ஆழ்ந்தனர்.

இதனால் தனித்து சில இடங்களில் போட்டியிட்டு அத்தனை இடங்களிலும் டெபாசிட் இழந்தது ராமமூர்த்தியின்கட்சி. தேர்தலுக்குப் பின்னர் இக்கட்சியின் செயல்பாடுகள் முடங்கிப் போயின. ராமமூர்த்தி அமைதியாக இருந்துவருகிறார்.

இந் நிலையில் தனது கட்சியை சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க முடிவுசெய்துள்ளார். இதுகுறித்து சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் தமிழக ஜனநாய காங்கிரஸை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சரத் பவார் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வருடன் பேச்சுவார்த்தைநடத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தஞ்சையில் நடைபெறும் பிரமாண்ட (???) மாநாட்டில் இணைப்பு விழாநடைபெறும்.

என்னுடன், முன்னாள் எம்.பிக்கள் சிங்காரவடிவேலு, டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் தேசியவாத காங்கிரஸ்கட்சியில் இணையவுள்ளனர் என்றார் ராமமூர்த்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+