அதிமுக வழியாக திமுகவுக்கு வந்த சுயேச்சை
மதுரை:சுயேச்சையாகத் தேர்வான கவுன்சிலர் ஒருவர் அதிமுகவில் இணைந்துவிட்டு மறு நாளே திமுகவில் சேர்ந்து ஓட்டுபோட்ட மதுரை மக்களை கலக்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ள சுயேச்சை கவுன்சிலர்களுக்கு பேரதிர்ஷ்டம் அடித்துள்ளது. தலைவர்பதவியைப் பிடிக்க ஆள் தேவைப்படும் இடங்களில் எல்லாம் சுயேச்சை வேட்பாளர்களுக்கும், பிற கட்சிவேட்பாளர்களுக்கும் ஆளுங்கட்சி தரப்பில் பணத்தாசை காட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதை நிரூபிப்பது போல ஏகப்பட்ட சுயேச்சை கவுன்சிலர்கள் திமுகவில் சேர்ந்து வருகின்றனர். இதில் மதுரைமாநகராட்சியின் 50வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் செந்தில்குமார் படு வித்தியாசமானவராக இருக்கிறார்.
சுயேச்சையான தேர்வான இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னைக்குச் சென்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவருக்கு ஜெயலலிதா நன்றியும், வாழ்த்தும் கூறினார்.
சென்னையிலிருந்து மதுரை திரும்பிய செந்தில்குமார், திடீரென அழகிரியை சந்தித்து மாலை அணிவித்து,பொன்னாடைபோர்த்தி காலில் விழுந்தார்.
அத்தோடு திமுகவில் இணைந்து விட்டார். தன்னோடு மேலும் 25 அதிமுகவினரையும் கூட்டிக் கொண்டுதிமுகவில் இணைந்துள்ளார்.
இவரது இந்த பலே தாவல் 50வது வட்டத்தில் மட்டுமல்லாது மதுரை மக்கள் மத்தியிலும் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, 30வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் சரஸ்வதியும், திமுகவில் இணைந்துவிட்டார். இந்த தாவல்கள்மூலம் மாநகராட்சியில் திமுகவின் பலம் 38 ஆக எகிறியுள்ளது.