குற்றால அருவிகளில் வெள்ளம்: குளிக்க தடை
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்:கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் உள்பட தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது.கன மழையால் நெல்லை மாவட்ட அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
பாபநாசம் அணையின் நீர் மட்டம் 82.85 அடியாகிவிட்டது. அதே போல சேர்வலாறு அணையின் நீர் மட்டம் 102அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மேலும் குற்றால அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் படு வேகத்தில் கொட்டுவதால்பாறைகளும் மரங்களும் கூட நீரில் வந்து விழுகின்றன.
இதனால் அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications