சுயேச்சைகளான 2 அதிமுக கவுன்சிலர்கள்
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் 2 கவுன்சிலர்களும்சுயேச்சைகளாக செயல்படப் போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர்களில் 4பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இவர்களை ராஜினாமா செய்யுமாறு அக் கட்சியின்பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
ஆனால் சுந்தரமூர்த்தி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் மட்டுமே ராஜினாமா செய்தனர்.புவனேஸ்வரி (வார்டு 1) மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் (வார்டு 26) ஆகியோர்ராஜினாமா செய்ய மறுத்து விட்டனர். இதனால் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர்.
இந் நிலையில் இன்று இருவரும் ரிப்பன் மாளிகைக்கு வந்து கவுன்சிலர்களாகபதவியேற்றுக் கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள்பேசுகையில்,
நாங்கள் கட்சிக்காக உழைத்தவர்கள். கட்சிக்கு எந்தவித அவமரியாதையையும்ஏற்படுத்தியதில்லை.
இவ்வளவு போராட்டத்துக்கு மத்தியிலும் நாங்கள் வெற்றி பெற்றோம். இதற்காகஎங்களை கூப்பிட்டு பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து எங்களைஅவசரப்பட்டு கட்சியை விட்டு நீக்கி விட்டனர்.
நாங்கள் இருவரும் தனித்தே, சுயேச்சையாக செயல்படுவோம். எங்களைத்தேர்ந்தெடுத்து மக்களுக்காக தொடர்ந்து சேவை செய்வோம் என்றனர்.