For Daily Alerts
Just In
சென்னையில் காந்தி சிலை தலை துண்டிப்பு!
சென்னை:சென்னை புளியந்தோப்பு பகுதியில் காந்தி சிலையின் தலையை விஷமிகள் சிலர்துண்டித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் காவல் நிலையம் அருகே மார்பளவிலான காந்திசிலை உள்ளது. கடந்த 1996ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைவர் தங்கபாலுஇந்த சிலையைத் திறந்து வைத்தார்.
இச்சிலை இன்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது. யாரோ சில விஷமிகள் நேற்று இரவு சிலையின் தலையைத்துண்டித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து புளியந்தோப்பு போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்திவருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, October 25, 2006, 5:30 [IST]